சுரக்காய சுவாமி சித்தர்

வட தமிழகத்தையொட்டிய ஆந்திர எல்லையில் உள்ளது புத்தூர். புத்தூரிலிருந்து மூன்று மைல் தொலைவில், நாராயணவனத்தில் உள்ளது
சுரக்காய சுவாமி சித்தர் ஜீவசமாதி. பக்தர்கள் நேர்த்திக் கடனாக இக்கோயிலுக்கு வந்து, ‘சுரைக்காயை உன் பாதத்தில் வைத்துத் திருக்கோயிலில் கட்டுகிறேன்!’ என்று வேண்டிக் கொண்டால் போதும், நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறுகின்றன.
சுரக்காய சுவாமியின் இயற்பெயர் ராமசாமி என்கிறார்கள். 1902ஆம் ஆண்டு இவர் ஜீவ சமாதி அடைந்தார் என்பதற்குக் குறிப்பு இருக்கிறது. சற்றே குள்ள மான உருவம், பொன்னிற நிறம், ஒளிபடைத்த கண்கள், நெற்றியில் திருநாமம். இரண்டு நாகள் எப்பொழுதும் உடனிருக்குமாம். கைகளில் இரண்டு சுரைக்கா குடுக்கைகளுடன் இருந்ததால் இவர், ‘சுரக்காய சுவாமி’ என்று அழைக்கப்பட்டிருக்கிறார். அதில் ஒன்றில் சாதமும், இன்னொன்றில் கூழும் இருக்குமாம். யார் வந்து பசிக்கிறது என்றாலும் அள்ளி அள்ளிக் கொடுப்பாராம். ஆனால், அதில் உணவு தீர்ந்து யாரும் பார்த்ததில்லையாம். அதை ஒரு அட்சய பாத்திரம் என்றே அனைவரும் சொல்கின்றனர். இன்றைக்கும் நாராயண வனத்து மக்கள் சாப்பிடுவதற்கு முன்பு இந்த சித்தரை வணங்கிய பின்பே சாப்பிடுகிறார்கள்.
பார்ப்பதற்குப் பிச்சைக்காரர் போல், இடுப்பில் ஒரு துண்டும், தோளில் ஒரு துண்டும் அணிந்திருப்பார். ஆனால், இவரைக் காண பெரும் செல்வந்தர்களும் வந்திருக்கிறார்கள். காரணம், இவர் குணப்படுத்த முடியாத பல்வேறு நோகளை வெறும் வேப்பிலை, மஞ்சள் தூள் மற்றும் சில மூலிகைகளைக் கொண்டே போக்கியிருக்கிறார். படிக்காதவர் போல் இருந்தாலும் இவருக்கு வேதங்கள், இதிகாச புராணங்கள், நாயன்மார்கள், ஆழ்வார்களின் அருட்பாடல்கள் அனைத்தும் தெரிந்திருக்கிறது.
வயிற்றுப் பசிக்கு இரவில் வீடு, வீடாகப் போய் பிச்சைக் கேட்பாராம். யாராவது, ‘எதுவும் இல்லை போ!’ என்றால். ‘பொய் சொல்லாதே... ஒரு சட்டியில் அரிசிச் சொறும், இன்னொரு சட்டியில் கம்பங்கூழும் இருக்கிறதே!’ என்று சரியாகச் சொல்வாராம். இவர் மேல் பிரியமான பலர், சாமி சாப்பாடு கொஞ்சமா இருக்கு. உங்களுக்குப் போதுமா?" என்றால், போய்ப் பாரு... சட்டி நிறைய இருக்கும்!" என்று சொல்லி, அதேபோல் இருக்கவும் செய்து, ஆச்சர்யப் படுத்துவாராம்.
ஒருமுறை நகரி ரயில் நிலையத்தில் இவர் ரயிலில் ஏறியிருக்கிறார். வெள்ளைக்கார டிக்கெட் பரிசொதகர், யோவ் பிச்சைக்காரா கீழ இறங்கு!" என்று சொல்லி அவரை இறக்கி விட்டிருக்கிறார். அதன் பிறகு ரயில் அங்கிருந்து நகரவே இல்லையாம். எவ்வளவோ முயற் சித்தும், போராடியும் ரயில் கிளம்பவில்லை. அதன்பிறகு, இவரை இறக்கிவிட்ட விஷயம் அங்குள்ளோருக்குத் தெரியவர, அவர்கள் பரிசொதகரிடம், உடனே அவரை ஏறச்சொல்லுங்கள். அப்பொழுதுதான் ரயில் கிளம்பும்" என்று சொல்ல,சித்தரைக் கெஞ்சி ஏற்றியிருக்கிறார்கள். இவரும் ஏறி உட்கார்ந்து கொண்டு, ‘ச்சூ போ!’ என்று சொல்ல ரயில் கிளம்பியிருக்கிறது!
1902ஆம் ஆண்டு ஆடி மாதம் அஸ்த நட்சத்திரம், கருட பஞ்சமியன்று, தான் குடியிருந்த சிறிய கோயிலிலேயே ஜீவசமாதி அடைந்திருக்கிறார். சித்தரின் சன்னிதியில் ஒரு அக்னிக் குண்டம் எரிந்து கொண்டிருக்கிறது. அதன் முன் அமர்ந்து மருத்துவத்தால் கைவிடப்பட்ட பலர் நோய் நீங்கி நிவர்த்தி பெற்று வருகிறார்கள்.
சித்தர் ஏற்றி வைத்த அந்த அக்னிக் குண்டம் இன்று வரை அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. இதுவரை தீக்குச்சியால் இதை ஏற்றியதில்லை" என்கிறார்கள் கோயில் நிர்வாகிகள். இதில் ஆலம், அத்தி, அரசன், வேம்பு, புளி, இலுப்பை, நாவல், ஜம்மு, பூவரசன்... என ஒன்பது வகை மரங்களின் கட்டைகள் எரிக்கப்பட்டு வேள்வி நடத்தப்படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் சாம்பலையே திருநீறாகத் தருகிறார்கள்.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி, அமாவாசைக்கு முதல் நாள் இரவு சிறப்புப் பூஜைகளுடன் அன்னதான மும் நடைபெறுகிறது. ஆடி மாத கருடபஞ்சமியில் அவருக்கு குரு பூஜை. அன்று நாராயண வனமே விழாக்கோலம் பூணுகிறது. பெண்களும், ஆண்களும் தங்கள் குறைகள், பிணிகள் நீங்கியதன் பொருட்டு சுரைக்காகளை வரிசையாக நின்று கட்டுகிறார்கள்.
வீட்டில் பெரியவர்கள் நோ வாப்பட்டு வர முடியாதவர் களாக இருந்தால், அவர்கள் உடுத்தும் உடையை ஒரு செட் எடுத்து வந்து, அவரே கோயிலுக்கு வந்ததாகப் பாவித்து இங்கு வைத்துப் பிரார்த்தனை செய்து கொண்டாலும் முழுப் பலன் அவருக்குக் கிடைக்கிறது.
நூறு ஆண்டுகளுக்கு முன்பே இவரின் அற்புதங்களை அறிந்து கொண்ட ஓர் ஆங்கிலேயர், அப்பொழுதே இவரைப் போற்றி ஆங்கிலத்தில் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டுக்கருகில் குசஸ்தலை ஆற்றோரம் இருக்கும் ஒரு கிராமம் பெரும் வெள்ளத்தில் அடித்துப்போகும் சூழல் ஏற்பட் டது. மக்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து சுரக்காய சுவாமியை மனமுருக வேண்டிக்கொள்ள, வெள்ளம் அந்தக் கிராமத்தின் பாதத்தை முத்தமிட்டு உள்வாங்கியது! சுவாமிக்கு நேர்த்திக்கடனாக அந்தக் கிராமத் தின் பெயரையே ‘சுரைக்காபேட்டை’ என்று வைத்து விட்டார்கள்.
கோயிலில் சுவாமி பயன்படுத்திய சுரைக் குடுக்கைகள், காலணிகள், கத்திகள், நைந்துபோன பஞ்சு ஆடைகள், கைத்தடி... என எல்லாமே வைத்திருக்கிறார்கள். சுவாமியின் ஆத்மா இங்கேயே இருப்பதாகவும், அது குறையோடு வருபவர்களுக்கு, அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து நிறைவோடு அனுப்புவ தாகவும் சொல்கிறார்கள்.

Comments