மங்கலம் அருளும் மாரியம்மன் திருத்தலங்கள்!

விருதுநகரில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் சிவாம்சம் கொண்டவள். கருவறையில் தேவிக்கு முன் சிங்கத்துக்குப் பதிலாக நந்தி வீற்றிருக்கிறார். தேவிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தால் கண்களைக் கழுவ கண் நோகள் நீங்குகின்றன.
மதுரை, சொழவந்தா னில் உள்ளது ஜெனகை மாரியம்மன் திருக்கோயில். அம்மை நோய் கண்டவர்கள், அம்மனின் பிரசாத தீர்த் தத்தை அருந்த, நோய் தீர்கிறது.
புதுக்கோட்டை, நார்த்தா மலையில் உள்ளது முத்து மாரியம்மன் திருக்கோயில். இங்கு அக்னி காவடி எடுத்தால் தீராத நோய்கள் தீர்கிறது. மழலை வரம் வேண்டுவோர் கரும்புத் தொட்டில் கட்டுகிறார்கள்.
ஊட்டியில் மகாமாரி, மகாகாளி இருவரும் ஒரே கருவறையில் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள காட் டேரியம்மன் சன்னிதியில் மந்திரித்துத் தரும் முடிக்கயிறு தோஷங்கள், நோகள், பில்லி, சூனியம் ஆகியவற்றை விலக்குகின்றனவாம்.
கோவையில் உள்ளது தண்டுமாரியம்மன் திருக் கோயில். குடும்ப வளம் பெருகவும், தீராத நோய்கள் தீர்ந்திடவும் இந்த அம்மன் அருள்புரிகிறாள்.
திருச்சி, மணப்பாறையிலுள்ள மாரியம்மன் கோயிலில் திருமணத்தடை உள்ளவர்கள் மஞ்சள் கயிறு வாங்கி அம்மன் சன்னிதியின் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் கட்டி நேர்ந்து கொள்ள, விரைவில் மணவாழ்வு கிட்டுகிறது.
கரூர், மகா மாரியம்மன் வழக்கு, வியாபாரச் சிக்கல் நீங்க, காணாமல் போன பொருட்கள் திரும்பக் கிடைக்க அருள்பாலிக்கின்றாள்.
திண்டுக்கல், கோட்டை மாரியம்மனைப் பிரார்த் தித்து உப்பு, மஞ்சளை கொடி மரத்தில் சமர்ப்பிக்க, வேண்டுதல் நிறைவேறுகிறது.
தஞ்சை, புன்னைநல்லூர் மாரியம்மன் துளஜா மன்னர் மகளின் கண் நோயைத் தீர்த்தவள். புற்றுரு வா அருள்பாலிக்கும் இந்த அம்மனுக்கு யந்திரப் பிரதிஷ்டை செய்தவர் நெரூர் சதாசிவப் பிரம்மேந்திரர்.
கோவை, உடுமலைப்பேட்டை மாரியம்மன் ஆல யத்தில், மார்கழி மாதம் திருவாதிரையன்று 108 தம்பதியருக்கு மாங்கல்ய பூஜை செய்யப்பட்டு சுமங்கலிகளுக்கு மஞ்சள் கயிறு வழங்கப்படுகிறது.
ஈரோடு, பெரிய மாரியம்மன் வெப்ப நோய்களைத் தீர்ப்பதில் வரப்ரசாதி. அம்மை நோய் கண்டவர்கள் இந்த மாரியம்மனை வேண்டிக் கொள்ள, நோய் குணமாகிறது.
கோபிசெட்டிபாளையம், சாரதா மாரியம்மன் ஆல யத்தில் மண் சட்டியில் நெருப்பை ஏந்தி பூசாரி வரு வதைத் தரிசித்தால் வாழ்க்கை வளம் பெறுவதாக நம்பிக்கை.
ஈரோடு, கருங்கல்பாளையம், சின்ன மாரியம்மன் மழலை வரம் அளிப்பதில் மிகுந்த வரப்ரசாதி. அம்மனின் விபூதிப் பிரசாதத்தை நெற்றியில் பூசியும், தண்ணீரில் கரைத்து அருந்தவும் நோய்கள் நீங்குகின்றன.

Comments