வையம் இடந்த வராகர்!

கஷ்டம் ஏற்படும்போது காப்பேன்’ என்று பக்தர்களுக்கு மட்டுமா பகவான் ஸ்ரீமந் நாராயணன் தயை காட்டி அவதாரம் எடுத்தார்?! தம் பத்னி பூதேவிக்கு ஏற்பட்ட சங்கடத்தைப் போக்கவும் அன்றோ அவர் அவதாரம் எடுக்க நேர்ந்தது!
*மீனாய், ஆமையாய் கொண்ட அவதாரங்கள் தேவருலகைக் காக்க அமைந்தது. நரசிம்ம அவதாரமோ தனது பக்தனைக் காத்து, துஷ்டனை சம்ஹரிக்க ஏற்பட்டது. வாமன, பரசுராம அவதாரங்கள் வழி தவறிப்போன அரசர், ஆட்சியாளர்களை அடக்கி அமைதியை நிலைநாட்ட அமைந்தது. ஸ்ரீராம, கிருஷ்ண அவதாரங் களோ, தர்மத்தை நிலைநாட்ட ஏற்பட்டது. ஆனால், வராக அவதாரமோ, வேத சம்ரட்சணத்துக்காகவும், ஹிரண்யாட்சன் என்ற அசுரனிடமிருந்து பூமிப் பிராட்டியைக் காக்கவும் அமைந்தது.
தசாவதாரங்களில் வராக அவதாரம் வித்தியாச மானதுதான்! வராகம் எனில் பன்றி. அதுவும், மூக்கு நுனியில் கொம்பு உள்ள பன்றி. இந்த அவதாரத்துக்குக் காரணம்தான் என்ன?
அசுரன் ஹிரண்யாட்சன் தேவர்களுக்கும் மனிதர் களுக்கும் கற்பனைக்கு எட்டாத ஹிம்சைகளைக் கொடுத்து வந்தான். இதனால், அவர்கள் அடைந்த துயரங்கள் மிக அதிகம்! ஆனால், அசுரன் கொண்ட மகிழ்ச்சியே மிக மிக அதிகம். அசுரன் ஹிரண்யாட்சன் மகிழ்ச்சி நிறைவடையாததால் சலிப்படைந்த அவன், ஒரு கட்டத்தில் மொத்தமாக பூமியையே பிரபஞ்சத் திலிருந்து பிடுங்கிக் கொண்டு போ பெருங்கடலினுள் அமிழ்த்தி வைத்தான். பூமியை ஒளித்து வைத்ததில் அவனது மகிழ்ச்சி ஒரு நிறைவைக் கண்டது.
பூமிப் பிராட்டியைக் காணாது, வருணன், அக்னி, சூரியன் உள்ளிட்ட தேவர்கள் திகைத்தனர். பூமியில் வாழும் உயிரினங்களுக்கு ஆற்றக்கூடிய தங்களின் கடமை தடைப்பட்டதைக் கண்டு தவியாத் தவித்தனர். வேறு வழியின்றி, காக்கும் தெய்வம் மஹா விஷ்ணுவிடம் முறையிட்டனர்.
விஷயமறிந்த மகாவிஷ்ணு, அவர்களைக் கருணையுடன் பார்த்ததோடு, அவர்கள் தாங்கள் கடமை மீது காட்டும் அக்கறையையும் புரிந்து கொண்டார். பூமி இல்லையெனில், மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய பணிகள் இல்லாது போகும். மனிதர்கள் இல்லாமற் போனால், இயற்கை தேவதைகளுக்கு வழியில்லாமல் போகும். பின், படைப்பின் நாயகன் பிரம்மனுக்கே அது பிரச்னையா முடியும். மனிதர்கள் வாழத்தகுந்த பூமியே, பிரம்மனின் படைப்புகளுக்கானகளமாக இருந்தது! பூமியில்தான் பஞ்ச பூதங்களும் தங்கள் பணிகளைச் செய்ய இயலும்! ஆனால், அந்த பூமா தேவி...? ஆழ்கடலில் சிறைப்பட்டுக் கிடந்தாள்.
தம் பத்னி பூமிப்பிராட்டியை மீட்கவும், உயிரினங் கள் வாழவும் புதியதோர் அவதாரம் எடுத்தார் ஸ்ரீ மகா விஷ்ணு. அதுதான் வராக அவதாரம். வராக ரூபமா கடலினுள் பாந்தார். பூமிப் பிராட்டியை சிறைப் படுத்திக் கொக்கரித்துக் கொண்டிருந்த ஹிரண்யாட்சனைத் தம் மூக்குக் கொம்பால் குத்திக் கிழித்துக் கொன்றார். பின்னர், பூமா தேவியை மூக்கின் மேல் நிறுத்தி, கடலில் இருந்து மேலே கொணர்ந்தார். ஸ்ரீமந் நாராயணனின் இந்த அவதாரம் கண்டு, பூமி உள்ளிட்ட அனைத்து உலகங்களும் ஆனந்தத்தில் கொண்டாடின.
இத்தகைய அற்புதக் கோலத்தைத் தாங்கிய வராகப் பெருமான், பூவராகராகக் கோயில் கொண்டு அருள்பாலிப் பது கடலூர் மாவட்டம் , ஸ்ரீமுஷ்ணம் திருத்தலத்தில்.
ஸ்ரீமந் நாராயணனை பாடி மகிழ்ந்தவர்கள் ஆழ்வார்கள். அத்தகைய தலங்களுக்கு திவ்ய தேச சிறப்பும் உண்டு. தலங்கள் மட்டுமல்லாது, பெருமானின் குணம், அவதாரங்கள், பிராட்டி என அனைத்தையும் பாடியுள்ளனர் ஆழ்வார்கள். ராமனும் கண்ணனும் பிரதானமாகப் பாடப் பெற்ற அவதாரங்கள் என்றாலும், ஸ்ரீவராகரும் ஆழ்வார்களால் அதிகம் பாடப் பெற்றுள்ளார்.
வராகத்துக்கு, ‘கேழல்’ என்றும் பெயர் உண்டு. ‘வல்லெயிற்றுக் கேழலுமா’ என்று பெரியாழ்
வார் பாடினார். பெருமானின் வளைந்த கொம்பின் அழகையும் ஆழ்ந்து, அனுபவித்துப் பாடினர் ஆழ்வார்கள். வராகப் பெருமானின் இயல்பை ஒரு படி மேலே போய், ‘மானமிலாப் பன்றியாம்’ என்று விளித்தாள் ஆண்டாள் நாச்சியார். பூமிப் பிராட்டிக்காக பெருமான் பட்ட பாட்டைச் சொல்லும் பாட்டில்,
‘பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்குபண்டொருநாள்
மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே’ என்றாள். பெருமான் ஏன் பன்றியா அவதரிக்க வேண்டும்? இந்தக் கேள்விக்கான பதிலை இப்பாசுரத்தில் ஆண்டாளம்மை தருகிறார் இப்படி!
ஹிரண்யகசிபுவின் சகோதரன் ஹிரண்யாட்சன், தன் வலிமையால் பூமியைப் பாயாகச் சுருட்டி எடுத்து கடலில் மூழ்கிச் சென்றபோது, தேவர், முனிவர்களது வேண்டுகோளினால் திருமால் நீருக்கும் சேற்றுக்கும் தாக்குப்பிடிக்கும் மஹா வராக ரூபமாக அவதரித்துக் கடலினுள் புகுந்து, அசுரனை கோட்டினால் குத்திக் கொன்று, பாதாள லோகத்தைச் சார்ந்திருந்த பூமியைக் கோட்டினாற் குத்தி எடுத்து வந்து பழையபடி விரித் தருளினன் என்ற வரலாற்றை இங்கே பாசுரத்தில் நினைவூட்டுகிறார்.
பூமிப்பிராட்டி வெகு காலம் நீரினுள் முழுகிக் கிடந்ததால் பாசி படர்ந்து கிடந்தாளாம். அவ்வாறு பாசி தூர்த்துக் கிடந்த பூமிப்பிராட்டி, பக்கலிலே அமர்ந்த ஆசையினால், அதற்குத் தோதாக பன்றி யின் உருவத்தைக் கைக் கொண்டான். அழுக்கு உடம்பினரா, நாம் அருவெறுக்கும்படியான பன்றி வடிவத்தையே அவன் ஏன் கொள்ள வேண்டும்? அழுக்கேறிய உடம்பென்ற எண்ணமும் அறியாத அவதாரத்தை அன்றோ நீ எடுத்துக் கொண்டா? என்று ஆண்டாள் தன்னுடைய பிரபன்ன பக்தியின் மிகுதியால், ‘மானமிலாப் பன்றி’ என்று தன்னை ஆக்கிக் கொண்டேயும் அருள்புரிந்தாயே என்று பாடியமைகிறார். அவ்வாறே, தம்மைத் தாழ்த்திக் கொண்டேயும் பிராட்டிக்கு அருள்புரிந்த பகவான், பக்தருக்காகவும் நிச்சயம் அருளுவான்!

Comments