நந்தி தீர்த்த தலம்!

பழைமை வாந்த பல கோயில்களுக்குப் பெயர் பெற்ற ஊர் பெங்களூரூ, மல்லேஸ்வரம். குறிப்பாக, சம்பிகே சாலைக்கு இணையாகச் செல்லும், 13 மற்றும் 15ஆம் குறுக்குத் தெருக்களுக்கு நடுவே அமைந்த தெருவை, ‘கோயில் தெரு’ என்றே அழைக்கிறார்கள். இங்கிருக்கும், காடு மல்லேஸ்வரர் மற்றும் நரசிம்ம மூர்த்தி, கங்கம்மா தேவி கோயில் களுக்கு நேர் எதிரே, வெற்று நிலமாகக் காட்சியளித்த இடத்தில் பதினேழு வருடங்களுக்கு முன்பு பூமிக்குள் புதைந்திருந்த ஒரு நந்தீஸ்வரர் கோயில் கண்டுபிடிக்கப் பட்டது.
1999ஆம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக நிலத்தைத் தோண்டியபோது, ஒரு இடத்தின் உள்ளே மண் நெகிழ்வாக இருக்க, வியப்புடன் மேலும் தோண்டத் தோண்ட, பரபரப்பு... பிரமிப்பு... விடுவிக்க முடியாத புதிர்களோடு வெளியே வந்தது, ‘தக்ஷிண முக நந்தி தீர்த்த கல்யாணி கே்ஷத்ரம்’என்றழைக்கப்படும் இந்த நந்தீஸ்வரர் ஆலயம்.
சாலையிலிருந்து பல அடிகள் இறக்கத்தில் அமைந்த இக்கோயிலுக்குத் தற்போது வெளிப்புற, உட்புற நுழைவாயில்களும், சுற்றுச் சுவர்களும் கட்டப்பட்டுள்ளன. Carbon dating முறையில் கோயிலுக்கு ஏழாயிரம் வயது இருக்கலாம் எனக் கருதுகிறார்கள் தொல்லியல் ஆவாளர்கள். பதினேழாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரும், சத்ர பதி சிவாஜியின் தம்பியுமான வெங்கோஜி ராவ் போன்ஸ்லே, திராவிடக் கட்டடக் கலையைப் பின் பற்றி எழுப்பிய கோயில், சாலைக்கு மறு புறமிருக்கிறது காடு மல்லேஸ்வரர் ஆலயம். நந்தி தீர்த்த கோயிலும் இந்தக் காலத்திலேயே அவரால் கட்டப்பட்டு பூமிக்குள் சென்றிருக்க வேண்டும் என்பது ஒரு அனுமானமாக இருந்து வருகிறது.
பன்னெடுங்காலமா மண்ணில் புதைந்திருந்தாலும் அழகு குன்றாமல் பொலிவுடன் திகழ்கிறது. பழைமையான கற்தூண்கள் தாங்கி நிற்கும் அழகான முற்றம். நடுவே படிக்கட்டுகளுடன் கல்யாணி தீர்த்தம். வழுவழுப்பான கருங்கல்லில் பொன் வண்ணத்தில் தீட்டப்பட்ட கண்களோடு வடிவாகச் செதுக்கப்பட்ட நந்தி. நந்திக்குச் சற்றே சரிந்த நிலையில் அதே பளபளப்பான கருங்கல்லில் சிவலிங்கம்.
காண்போரை எல்லாம் வியப்பில் ஆழ்த்தும் கட்ட மைப்புடன், நந்தியின் வாயிலிருந்து தெள்ளிய நீர், அபிஷேகப் பிரியரான சிவபெருமானின் மேல் தொடர்ந்து விழுந்து அபிஷேகம் ஆகிக் கொண்டிருக்கிறது. தற்போது செம்பினால் ஆன பெரிய தாரா பாத்திரத்தில் இந்த நீர் விழுந்து, அதன் கீழுள்ள துளை வழியாக சிவனை அபிஷேகம் செவது போல் அமைத்துள்ளார்கள். தொடர்ந்து தமக்கு நடைபெறும் அபிஷேகத்தினால் உளம் குளிர்ந்து மக்களை ஆசிர்வதித்துக் கொண்டிருக்கிறார் சிவபெருமான்!
சிவபெருமான் மேல் தொடர்ந்து விழுகின்ற நீர் படிக்கட்டுகள் வழியாகச் சென்று முற்றத்துத் தீர்த்தத் தில் சேகரமாகிறது. தீர்த்தத்தின் மத்தியில் 15 அடி ஆழம் கொண்ட நீர்ச்சுழல் ஒன்றும் உள்ளது. எங் கிருந்து நீர் வருகிறது? எவ்வண்ணம் அது நந்தியின் வாவழி சிவலிங்கத்தின் மேல் பொழிகிறது? எப்படி அத்தீர்த்தத்தில் சுழல் உண்டாகிறது? சுழல் வழியாக நீர் எங்கே செல்கிறது? வடிவமைத்த திறன்மிகு சிற்பி யார்? என்பன யாவும் இன்றளவிலும் புரியாத புதிராகவே உள்ளது.
தீர்த்தத்தில் ஆமைகள் பல நீந்தி விளையாடுகின்றன. பக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற நாணயங்களைக் குளத்தில் வீசிச் செல்வதும் நடக் கிறது. வேண்டும் பக்தர்களுக்கு அபிஷேக நீர் பாட்டில்களில் சேகரித்துத் தரப்படுகிறது. இப்புனித நீரை அருந்துவதால், நோவாப்பட்டவர் மேல் தெளிப்பதால், தீராத நோகள் தீருகின்றன என்பது பக்தர்களின் அனுபவக் கூற்று. சிவபெருமானை நோக்கி அமர்ந்திருக்கும் நந்தியின் காதில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலைச் சோல்லிச் செல்கிறார்கள். கோயிலுக்குள் இருக்கும் இரு நந்திகளோடு, கோயி லின் வாயிலில் மற்றும் சுற்றுச் சுவர்களில் எங்கெங்கும் நந்தி தேவரே காணப்படுகிறார்.
கோயிலுக்கு மேலே சற்றுத் தொலைவில் இருக்கும் சாங்கி ஏரியிலிருந்து நீர் வருகிறதோ எனும் அனுமானம் இன்னும் உறுதி செயப்படவில்லை. இங்கு மகா சிவராத்திரியன்று சிறப்புப் பாலபிஷேகம் நடைபெறு கிறது. தரிசனம் முடித்து, அமைதியான சுற்றுச் சூழலை ரசித்தபடி திரும்பிச் செல்ல மனமின்றி படிக் கட்டுகளில் பக்தர்கள் அமர்ந்து விடுகிறார்கள். குடும் பத்துடன், நண்பர்களுடன் பேசி மகிழ்ந்து களிக்கிறார் கள். பெங்களூரு வருபவர்கள் தவறாமல் தரிசிக்க வேண்டிய தலம் நந்தீஸ்வரர் திருக்கோயில்.
தரிசன நேரம்: காலை 7.30 மணி முதல் 12 வரை. மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை.

Comments