சகலகலாவல்லிமாலை! - ஸ்ரீமூக பஞ்ச சதி

கல்விச் செல்வம் கைகூட...  சகலகலாவல்லிமாலை!
பண்ணும் பரதமும் கல்வியும்
            தீஞ்சொற் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்த
           நல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும்
          கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்
          சகல கலா வல்லியே
கருத்து: சகலகலாவல்லியே! சரஸ்வதிதேவியே! வேதத்தால் போற்றப்படுபவளே! பஞ்ச பூதங் களிலும் பரவி இருப்பவள் நீ! அன்பர்களின் கண்ணிலும் கருத்திலும் நிறைந்து இருப்பவளும் நீயே! நான் எண்ணும்போது, கல்விச் செல்வம் எளிதாக எனக்குக் கை கூடும்படியாக அருள் புரிவாயாக!

ஸ்ரீமூக பஞ்ச சதி
ச்யாமா காசன சந்த்ரிகா
த்ரிபுவனே புண்யாத்ம நாமானனே
ஸீமா சூன்ய கவித்வ வர்ஷ ஜனனீ
யா காபி காதம்பினீ
மாராராதி மனோ விமோஹனவிதௌ
காசித்தம: கந்தலீ
காமாக்ஷ்யா: கருணா கடாக்ஷ லஹரீ
காமாய மே கல்பதாம்
கருத்து:  ஸ்ரீகாமாட்சி தேவியின் கருணை நிறைந்த கடைக் கண்களின் வரிசையானது இணையில்லாத கறுப்பு நிறம் கொண்ட சந்திரிகை போலவும்; மூவுலகங்களிலும் புண்ணியம் செய்தவர்களின் வாக்கில் அளவில்லாத நூல் இயற்றும் திறமையைப் பொழியும் மேகக் கூட்டம் போலவும்; மன்மதனை எரித்த சிவபெருமானின் மனதை மோகம் கொள்ளச் செய்வதில், இணையில்லா இருள் குவியல் போலவும் இருக்கிறது. தேவியின்  அந்த அருள் வெள்ளம் என் விருப்பத்தை நிறைவேற்றட்டும்

Comments