ஸ்ரீநரசிங்க பெருமாள்!

பக்த பிரகலாதனுக்கு காட்சி தந்த அதே கோலத்தில்... ஸ்ரீநரசிம்மராக எனக்கும்
காட்சி தாருங்கள்; புத்திரப் பேறும் அருளுங்கள்'- என்ற ரோமச முனிவரது வேண்டுதல்கள் பலித்த திருத்தலம்- ஆனைமலை!
மதுரை- திருச்சி நெடுஞ்சாலையில் மதுரையில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது ஒத்தக்கடை. இங்கிருந்து பிரியும் சாலையில் சுமார் ஒரு கி.மீ. பயணித்தால் ஆனைமலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீயோக நரசிம்மர் திருக்கோயிலை அடையலாம்.
இந்த கஜகிரி (ஆனை மலை) சேக்ஷத் திரத்தில் அமைந்துள்ள சக்கரத் தீர்த்தத்தின் (தாமரைக் குளம்) அருகில்தான்... புத்திர பாக்கியம் வேண்டியும், பிரகலாதனுக்குக் காட்சி அளித்ததைப் போல் தனக்கும் ஸ்ரீநரசிங்கராக காட்சி தர வேண்டும் என்றும் ரோமச முனிவர் யாகம் செய்தாராம். இதனால் மகிழ்ந்த ஸ்ரீநரசிம்மர், இரண்யனை வதம் செய்த தருணத்தில் இருந்த அதே உக்கிர கோலத்துடன் முனிவ ருக்குக் காட்சியளித்தாராம்.

நரசிம்மரின் கடும் உக்கிரத்தில் அக்னி ஜுவாலையே எழுந்தது. இதனால் அனைத்து உலகமும் வெப்பத்தால் தகித்தது. வெப்பத்தை தாங்க முடியாமல் தவித்த தேவர்களும் முனிவர்களும் கஜகிரி தலத்துக்கு ஓடோடி
வந்தனர், ‘உக்கிரம் தணிந்து, சாந்தம் அடையுங்கள்' என ஸ்ரீநரசிங்கரை வேண்டினர். ஆனாலும் நரசிம்மரது உக்கிரம் தணிந்தபாடில்லை.
இதையடுத்து, வாயு பகவான் மூலம் பிரகலாதனை அழைத்து வந்தனர் தேவர்கள்.
அவனது வேண்டுகோளை அடுத்து ஸ்ரீநரசிங்கரது உக்கிரம் சற்றே தணிந்தது. ஆனாலும் தேவர்களது பதட்டம் குறை யவே இல்லை. ஸ்ரீமகாலட்சுமி தேவியை தரிசித்து, "சாந்த சொரூபமாக ஸ்வாமி காட்சி தர தாங்களே உதவ வேண்டும்'' என்று வேண்டினர்.
அவர்களது வேண்டுகோளை ஏற்ற அலைமகள், ஸ்ரீநரசிம்மரின் வலது மார்பில் குடியேறி, அவரை பரிபூரணமாக சாந்தப்படுத்தினாள்.
ஸ்ரீநரசிம்மரும் சாந்த வடிவில், யோக நிலையில் காட்சி தந்தார். ரோமச முனிவருக்கு புத்திர பாக்கியத்தையும் வழங்கி அருளினார்.
ரோமச முனிவருக்கு மட்டுமல்ல, சிவனா ருக்கும் அருள்பாலித்த தலம் இது!
ஒரு முறை, பிரம்மாவின் ஐந்து தலை களில் ஒன்றை கொய்து விட்டதால், சிவனாரை பிரம்மஹத்தி தோஷம் சூழ்ந்தது. இதில் இருந்து விடுபடுவதற்காக, கஜகிரி «க்ஷத்திரத்துக்கு வந்தார் சிவபெருமான்! இங்குள்ள சக்கர தீர்த்தத்தில் நீராடியவர், ஒரு மண்டல காலம் இங்கேயே தங்கி, ஸ்ரீநரசிங்கரை வழிபட்டாராம்!
பார்ப்பதற்கு யானை ஒன்று படுத்திருப்பது போன்ற தோற்றம் தரும் இந்த மலை வெகு அழகு. இதன் அடிவாரத்தில் அமைந்த குடைவரைக் கோயிலில் அருள் பாலிக்கிறார்கள் ஸ்ரீயோக நரசிம்மரும், ஸ்ரீநரசிங்கவல்லித் தாயாரும்!
முதலாம் வரகுணபாண்டியனின் அமைச்சரான மாறங்காரி என்பவன், கி.பி.770-ல் இந்த ஆலயத்தை எழுப்ப முற்பட்டானாம். ஆனால், இந்த திருப்பணிகள் முற்றுப் பெறாமல் பாதியிலேயே நின்று போனதாம்.
மாறங்காரிக்கு பிறகு அமைச்சராகப் பொறுப்பு வகித்த அவனின் தம்பி மாறன் பொன்னன், கோயிலின் திருப்பணியை செவ்வனே நிறைவேற்றி, முன்மண்டபமும் எழுப்பியதாக கல்வெட்டு தகவல்கள் கூறுகின்றன.
கோயிலுக்குள் நுழைந்ததும் வடக்கே, தெற்கு பார்த்தபடி சுகாசனத்தில்... அமர்ந்த திருக்கோலத்தில் மேலிரு கரங்களில் தாமரை; முன்னிரு கரங்களில் அபய-வரத முத்திரைகளுடன் காட்சி தருகிறாள் ஸ்ரீநரசிங்கவல்லித் தாயார்.
அடுத்து கருட மண்டபம்; மகா மண்டபம்; முன்மண்டபம். கடந்து உள்ளே செல்ல... சிறிய கருவறையில், யோகாசன நிலையில் கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீயோக ஸ்ரீநரசிம்மர்.
பின்னிரு கரங்களில் சங்கு-சக்கரம் திகழ... முன்னிரு கரங்களை, முழங்கால் மீது வைத்திருக்கும் ஸ்ரீயோக நரசிம்மரை தரிசித்துக் கொண்டே இருக்கலாம்!

Comments