ராகு தோஷம் போக்கும் அம்மன் ஆலயம்

அனுகூலமான ராகு தசை ஆண்டியான ஒருவரையும் சக்கரவர்த்தியாக்கிவிடும் என்கிறது பூர்வபாராசரியம் எனும் ஜோதிட நூல். ராகு ஒருவரை சாதகமாக இருந்து குபேரபுரிக்கும் அழைத்து செல்வார். பாதகமாக இருந்தால் கொடூரமான பயன்களையும் அளிப்பார்.
ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாமிடத்தில் ராகு இருப்பதால் திருமணம் தாமதமாகும். ஐந்தாமிடத்தில் இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும். எட்டாமிடத்தில் ராகு பகவான் வேலையில்லா திண்டாட்டம் ஒற்றுமைக்குறைவு போன்ற பிரச்சனைகளை உருவாக்கவகூõர் இவற்றுக்கெல்லாம் தீர்வு. அதிதேவதையான துர்க்கையை வணங்குவது தான். துர்க்கையின் அம்சமான கருமாரி, காளி போன்ற தெய்வங்களை பூஜிப்பதும், ராகுவை உரிய முளையில் வணங்குவதும் கூட நற்பலன் தரும்.
ராகுவுக்கு உரிய தலம் எஜன்றதும் தமிழகத்தில் தங்சை மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரமே. பலருக்கும் நினைவுக்கு வரும். அதே போன்ற ராகு தோஷ நிவர்த்தி தலம் ஒன்று திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ளது.
இங்குள்ள பகவதி அம்மன் கோயிலில் தான் திருநாகேஸ்வரத்தில் உள்ளது போல் நாகவள்ளி, நாககன்னி, தேவி சமேதராக காட்சியளிக்கிறார். ராகுபகவான் திருநாகேஸ்வரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட சக்திவாய்ந்த ராகு யந்திரமும் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகு கால வேளையில் ராகு தோஷம் நிவர்த்தியாகிட சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்யப்படும் பாலை நோய் நிவாரணம் வேண்டியும், மகப்பேறு கிட்டவும் அருந்துகின்றன. ராகுபகவானுக்கு செய்யப்படும் பால் முதலிய எல்லா அபிஷேகங்ளையும் எந்தவித வேறுபாடுமின்றி பக்தர்கள் வரிசையில் நின்று தாங்களாகவே செய்கின்றனர். அர்ச்சனை வழிபாடு கற்பூர அராதனையும் பக்தர்களே செய்கின்றனர். அவரவர் கொண்டு வந்த பிரசாதத்தை அவரவரே ராகுபகவானுக்கு படைத்து பின் தங்கள் கைளாகலேய பக்தர்களுக்கு விநியோகம் செய்கின்றனர்.
ராகு பகவானுக்கு உரிய அதிதேவதையாக துர்க்கையின் அம்சமாக கருமாரிஅம்மன் இத்ததலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால் இருமடங்கு விரைவாக தோஷங்கள் நிவர்த்தியாகும் என்கின்றனர்.

திருக்கோயிலில் உள்ள பகவதி அம்மன் கருமாரி அம்மன் ராகுபகவான் சுடலைமாடசாமி ஆகியோர் கிரகங்களில் சிவப்பு கயிறு வைக்கப்பட்டுள்ளது./ இந்த கயிறு ஒவ்வொறு அமாவாசை, பௌர்ணமி தோறும் மாற்றப்படுகிறது. நாற்பத்தெட்டு நாட்கள் அம்மன் சிரசில் வைக்கப்பட்ட பின் காவல் தெய்வமான சுடலைமாடசாமி சிரசில் வைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக்கொள்கின்றன. இக்கயிறு துர் தேவதைகளால் பயம், விபத்து, நோய் நொடிகள் ஏற்படாமல் ரட்சையாக காக்கும் என்று நம்புகின்றனர்.
இத்தலம் வந்து வழிப்பட்டால் திருநாகேஸ்வரம் சென்று வழிபட்ட பலனை அடையலமாம் ராகுவால் உண்டாகும் தோங்கள் நீ“ஙகி நன்மை பெற பல நூறு பக்தர்கள் வழிபடுகின்றன.
திருநெல்வேலி மாநகர் பாளையங்கோட்டை பெருமாள் மேலரத வீதியில் எளிமையான தோற்றத்துடன் அமைந்துள்ளது இத்திருக்கோயில்

Comments