மரத்தடி பிள்ளையார்

ரசமர நிழலும் வன்னிமர நிழலும் ஆனை முகன் விரும்பி அமரும் இடங்கள். இவை மட்டுமன்றி மேலும் பல்வேறு மரங்களின்கீழும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார். எந்தெந்த மரத்தின்கீழ் அமர்ந்திருக்கும் பிள்ளையாரை வழிபட் டால் என்னென்ன பலன் கிட்டும் தெரியுமா?
வன்னிமரப் பிள்ளையார்

அவிட்ட நட்சத்திர நாட்களில் வன்னி விநாயகரை நெல்பொரியினால் அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் கைகூடும்.

புன்னைமரப் பிள்ளையார்
ஆயில்ய நட்சத்திர தினத்தில் இவருக்கு இளநீர் அபிஷேகம் செய்து வஸ்திரங்களை அணிவித்து பின் ஏழை நோயாளிகளுக்கு உணவு, உடை தானம் அளித்தால் தம்பதியரிடையே உள்ள மனக்கசப்பு நீங்கும்.

மகிழமரப்பிள்ளையார்

அனுஷ நட்சத்திரத்தில் மாதுளம்பழ முத்துகளால் இவரை அபிஷேகித்தால் பணிக்காக குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றிருப்பவர்கள் நலமுடனிருப்பர்.

மாமரப்பிள்ளையார்

இந்தப் பிள்ளையாருக்கு கேட்டை நட்சத்திரத்தன்று விபூதிக் காப்பிட்டு, ஏழைச் சுமங்கலிகளுக்கு உடை, உணவு அளித்து வந்தால், கோபம், பொறாமை, பகைமை மாறி, பாதிக்கப்பட்ட வியாபாரம் சீர் பெறும்.

வேப்பமரத்தடிப் பிள்ளையார்:

உத்திரட்டாதி நட்சத்திர நாளில் தீபம் ஏற்றி இவரை வழிபட்டால், கன்னியருக்கு மனம்போல் மாங்கல்யம் கிட்டும்.

ஆலமரப்பிள்ளையார்:

ஆலமரத்தின்கீழ் வடக்கு நோக்கி இருக்கும் பிள்ளையாருக்கு நோயாளிகள் மகம் நட்சத்திரத்தன்று சித்ரான்னங்களை நிவேதனம் செய்து தானமளித்தால் கடுமையான நோயிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.
அரசமரப்பிள்ளையார்:

பூச நட்சத்திரத்தன்று இவருக்கு அன்னாபிஷேகம் செய்தால் விளைபொருள் மற்றும் பூமியால் லாபம் கிட்டும்.

வில்வமரப்பிள்ளையார்:
சித்திரை நட்சத்திரத்தன்று இப்பிள்ளையாருக்கு வழிபாடு செய்து ஏழைகளுக்கு தானம் அளித்து வில்வ மரத்தைச் சுற்றி வந்தால், பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர்.

Comments