கோடி நன்மை தரும் கோமடி சங்கு

கயிலையில் பரமேஸ்வரனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது, கூடிய கூட்டத்தால் உலகம் சமநிலை இழந்தது.

அதனை சமப்படுத்த அகத்தியரை அனுப்பினார் ஈசன்.

திருமண வைபவத்தைக் காணும் பாக்கியம் தனக்கு இல்லையே என்று அகத்தியர் நினைக்க, அவருக்கு விருப்பமான இடத்திலெல்லாம் மணக்கோலம் காட்டியருள்வதாகச் சொன்னார் மகேசன்.

பூவுலகம் வந்து உலகை சமநிலைப்படுத்தியதும் அகத்தியர் ஒவ்வொரு தலமாக இறைவனை தரிசித்துக் கொண்டும், சில இடங்களில் தவத்தை மேற்கொண்டும் வந்தார். அப்படியொரு நாள், மலைமீது அமர்ந்து அருள்பாலிக்கும் குமரக் கடவுளை தரிசிக்க வருகிறார். அவருக்கு முருகன் வள்ளி, தெய்வானை சமேதராகவும், ஞானத்தைப் போதிக்கும் தட்சிணாமூர்த்தி அம்சமாகவும் தெற்கு நோக்கி காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். பெரும்பேறு கண்டிகை என்ற அழகிய கிராமத்தில் அமைந்திருக்கும் சிறிய மலைக்குன்றின் மீது அமர்ந்திருக்கும் முருகப்பெருமான் தலமே அது.

பின்பு அகத்தியர் அங்கிருந்து மேற்குப் புறத்தில் சுயம்பு மூர்த்தமாக, மணல் லிங்கத்தில் அமைந்திருக்கும் தான்தோன்றீஸ்வரரை தரிசித்து, அத்தலத்துக்கு அருகிலேயே தவத்தை மேற்கொள்கிறார். அப்படி அவர் தவம் செய்து கொண்டிருக்கும் நாளில், சித்ரா பௌர்ணமி தினம் வருகிறது. அப்போது தான்தோன்றீஸ்வர பெருமானை, இன்று இங்கு தங்களின் திருமணக் கோலத்தை காண்பித்தருள வேண்டும் என வேண்டுகிறார்.

உடனே உமாமகேஸ்வரன் தனது திருமணக்கோலத்தைக் காண்பித்து அருள்பாலிக்கிறார். இப்படி இறைவன் அகத்தியருக்குக் காட்சி தந்த தலம்தான், தடுத்தாட்கொண்ட நாயகி உடனுறை தான்தோன்றீசுவரர் திருத்தலமாகும்.

இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக மணல்லிங்க வடிவில் ஆரம்பத்தில் இருந்து வந்தார். அபிஷேகம் செய்ய வசதியாக செப்புக் கவசம் அணிவிக்க இறைவன் இசைந்து அருள்புரிந்தாராம். அதன்படி தற்போது லிங்கத்தின் மீது செப்புக் கவசம் மாட்டப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

சுமார் இரண்டாயிரம் வருடங்களைக் கடந்து நிற்கும் இவ்வாலயத்திற்கு பல்லவ பேரரசர்களும், சோழ மன்னர்களும் ஏராளமான திருப்பணிகள் செய்திருக்கின்றனர் என்பதை இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.

தெற்கு வாயில் வழியாக உள்ளே சென்றால் கிழக்கு நோக்கிய கருவறையில் தான்தோன்றீஸ்வரர் காட்சி தருகிறார். தெற்கு நோக்கி அன்னை உமாதேவியார் தடுத்தாட்கொண்ட நாயகியாக அருள்பாலிக்கின்றார்.

சுற்றுப்பிராகாரத்தில் தனிச்சன்னதியாக தெற்கு புறத்தில் வடக்கு நோக்கி ரண பத்ர காளி சன்னதி அமைந்துள்ளது. திருவக்கரை வக்ரகாளியே இங்கு ரணபத்ரகாளியாகக் காட்சி கொடுக்கிறாள். சண்டன், முண்டன் என்ற இரு அசுரர்களை தேவர்கள் வேண்டுகோளின்படி அழித்த தேவி இவள்தானாம்.

இந்த ரணபத்ரகாளியை விக்கிரமாதித்தனும், பட்டியும் தரிசித்து வழிபட்டதாகவும், அதன் பிறகுதான் உறையூர் சென்று வெக்காளியம்மனை அவர்கள் தரிசித்ததாகவும் தலபுராணம் கூறுகிறது.

இத்தலத்தில் காண்பதற்கரிய கோமடி சங்கு இருக்கிறது. ஒரு கோடி சங்கில் ஒரு சங்குதான் வலம்புரிச் சங்காகக் கிடைக்கும். அப்படி ஒரு கோடி வலம்புரிச் சங்கில் ஒரு சங்கே கோமடி சங்காக அமையுமாம்.

இந்தக் கோமடி சங்கை சாட்சாத் பரமேஸ்வரியின் ஸ்வரூபமான கோ(பசு) மடி, அதாவது பசுவின் மடிபோன்ற அமைப்பில் உருவாவது. இந்தக் கோமடி சங்கு இக்கோயிலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தோன்றி சுமார் ஆயிரம் வருடங்களுக்கு மேலிருக்குமாம்.

இந்த கோமடி சங்கால் சுத்த பசும்பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்தோமானால் பரமேஸ்வரியே பரமேஸ்வரனுக்கு பாலபிஷேகம் செய்தது போன்றதாகுமாம். இதைச் செய்வோருக்கும், தரிசிப்போருக்கும் பல கோடி நன்மை கிடைக்கும் என்பதை திருவாடுதுறை ஆதீனத்தில் உள்ள ஓலைச்சுவடியில் காணலாமாம்.

இத்தலத்தின் தலவிருட்சம் திருஆத்தி மரமாகும். இத்தலத்தில் வடக்கில் காணப்படும் இம்மரத்தின் கீழ்தான் அகத்தியர் தவமிருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஏறக்குறைய இரண்டாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்ததாம்.

சுற்றுப்பிராகாரத்தின் மேற்கில் கனக துர்க்கை புடைப்புச் சிற்பமாகக் காட்சி தருகிறார். அருகே ஒரு மான் நிற்க, எருமைத் தலையை மிதித்தபடி சுற்றிலும் கிளி, பட்டி, வேதாளம் மற்றும் சங்கு சக்கர கதாயுதத்துடன் காட்சி தருவது விசேஷமான வடிவம் ஆகும். இந்த கனகதுர்க்கை பித்ரு தோஷம் நீங்க அருள்பாலிப்பதாகவும் நம்பப்படுகிறது.

காலத்தைக் கடந்து நிற்கும் தடுத்தாட்கொண்ட நாயகி உடனுறை தான்தோன்றீஸ்வரர் திருத்தலத்துக்கு குடும்பத்தோடு வந்து தரிசியுங்கள். பல அதிசயங்களை தன்னுள் கொண்டிருக்கும் ஆலயங்களில் இதுவும் ஒன்று.

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் அச்சிறுபாக்கத்தை அடுத்து தொழுபேடு என்ற இடத்தில் இறங்கி சுமார் 1 கி.மீ. தூரம் வடக்கில் சென்றால் இத்தலத்தை அடையலாம்.

Comments

  1. இத்தலத்தில் காண்பதற்கரிய கோமடி சங்கு இருக்கிறது. ஒரு கோடி சங்கில் ஒரு சங்குதான் வலம்புரிச் சங்காகக் கிடைக்கும். அப்படி ஒரு கோடி வலம்புரிச் சங்கில் ஒரு சங்கே கோமடி சங்காக அமையுமாம்.

    அருமையான பகிர்வு.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. பித்ரு தோஷம் என்றால் என்ன?

    நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.

    அதை ஜாதகத்தில் கண்டறிவது எப்படி?

    ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்த்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு.

    அதற்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

    ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்துகொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை.

    அந்த தோஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் என்ன?

    இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது. அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாக ரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. கலப்புத் திருமணம் நடக்கவும், பெற்றொருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு .இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்துகொள்வதில்லை.

    எத்தகைய பாவங்கள் செய்திருந்தால், இந்த தோஷம் வரும்?

    இந்த தோஷம் வருவதற்கான கரணங்கள்: கருச்சிதைவு செய்துகொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும். ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை , சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும்.



    தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம்.

    இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும் பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள்.




    பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது


    21 தலைமுறைக்கு கயா,காசி யில் பித்ரு பூஜை பிண்டதானம் மற்றும் தர்ப்பனம் செய்ய விரும்புவோர் தொடர்புகொல்லவும்




    A.SUBRAMANIAM.JOTHIDA VALLUNAR

    MOBILE-9910738463/96505720/011-27307584


    ReplyDelete
  3. பித்ரு தோஷம் என்றால் என்ன?

    நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.

    அதை ஜாதகத்தில் கண்டறிவது எப்படி?

    ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்த்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு.

    அதற்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும்?

    ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்துகொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை.

    அந்த தோஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் என்ன?

    இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது. அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாக ரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. கலப்புத் திருமணம் நடக்கவும், பெற்றொருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு .இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்துகொள்வதில்லை.

    எத்தகைய பாவங்கள் செய்திருந்தால், இந்த தோஷம் வரும்?

    இந்த தோஷம் வருவதற்கான கரணங்கள்: கருச்சிதைவு செய்துகொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும். ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை , சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும்.



    தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம்.

    இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும் பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள்.




    பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது


    21 தலைமுறைக்கு கயா,காசி யில் பித்ரு பூஜை பிண்டதானம் மற்றும் தர்ப்பனம் செய்ய விரும்புவோர் தொடர்புகொல்லவும்




    A.SUBRAMANIAM.JOTHIDA VALLUNAR

    MOBILE-9910738463/96505720/011-27307584


    ReplyDelete

Post a Comment