ஆன்மிக சிந்தனைகள் - ஸ்ரீ அன்னை

சந்தர்ப்பத்தை நழுவவிடாதே

இறைவன் அனைவரையும் ஒன்று போல் தான் நேசிக்கிறான். ஆனால் பெரும்பாலான மனிதர்களின் உணர்வு இருண்டுள்ளதால் தெய்வீக அன்பை அவர்களால் உணர முடிவதில்லை.

* அன்பு மனிதர்களிடம் மட்டும் வெளிப்படுவதில்லை. அது அனைத்து இடங்களிலும் பரவியுள்ளது. தாவரங்கள், கற்கள், விலங்குகளிடமும் இருப்பதை காணலாம்.

*இன்றைக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பையும், சந்தர்ப்பத்தையும் கை நழுவ விட்டால் அதை மீண்டும் பெற ஒரு வேளை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கலாம்.

*ஒவ்வொரு இரவிலும் தூங்க செல்வதற்கு முன் அன்று முழுவதும் நாம் செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க பிரார்த்தனை செய்ய வேண்டும்.

*என்ன நடந்தாலும், நாம் அமைதியாகவும், இறைவன் அருளில் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்.

*இறைவனின் சொற்கள் பேரின்பத்தையும், இதத்தையும் அளித்து ஒளியூட்டுகின்றன. இறைவனின் கருணைக்கரங்கள் எல்லையில்லா ஞானத்தை மறைக்கும் ஒவ்வொரு திரையையும் விலக்குகின்றன.
-ஸ்ரீஅன்னை

Comments