சித்தர் வழியில்…, குருதேவ சித்தர்

சித்தர் வழியில்…, குருதேவ சித்தர்

ஆன்மீகம், சித்தர்கள், யோகிகள்களின் அமானுஷ்ய அற்புதங்களை நாம் இன்று பரவலாக பார்க்கிறோம்,கேட்கிறோம், கேள்விபடுகிறோம். இதில் உண்மையானவர் சிலரே. அவர்களும்

தங்களை வெளிக்காட்டிக் கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை என்பதே உண்மை. தன்னை

மறைத்தே வாழவும்,தன் வாழ்க்கையின் குறிக்கோளிலும் திடமாக நிற்பர்.



அதே சமயம் போலிகளும், சில்லறைகளும் மலிந்துவிட்டனர். உண்மை எது போலி

எதுவென அறியவியலாத அளவுக்கு பசும்பாலில் நீர் கலந்தார் போலாகிவிட்டது.

நமது தொடரில் தேரையாரைப் பற்றி கண்டுள்ளோம். மன்னனின் தூக்கத்தில் போது ஒரு

சிறு தேரை மூக்கின் வழியாக சென்று அவனை வாட்டியது.



அதேபோன்ற கதைதான் குருதேவ சித்தர்.

மனித குலத்திற்கு மிகப்பெரிய உதவியாய், மூலிகைகளின் மகத்துவத்தை உணர்த்திய

அகத்தியர், போகர், கோரக்கர்,தேரையார்,சட்டைமுனி, போன்ற நாற்பத்து மூன்று

சித்தர்களின் அற்புதங்களை மட்டுமல்லாது, எங்கோ சிற்றூரில், பைத்தியக்காரனைப்

போல, சுயசித்தி இல்லாதவர்களைப் போல, பரதேசியை போல, இருப்பவர்கள்
மூலிகைகளை அறிந்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
தமிழகத்தில் கொல்லிமலையை அறியாதவர்கள் யாருமில்லை. செம்மொழி மாநாட்டின் போது,
திரு,திருமதி.சிங்கை.பழனி, சிங்கை.மணீயம், பாரீஸ்சை சேர்ந்த திரு.திருமதி. லெபோ.பெஞ்சிமென்,
அமெரிக்காவிலிருந்து திரு, ஆல்பெட் ஆகியோர் நாமக்கல் கலெக்டெர் திரு,சகாயம் அவர்களின்

வழிக்காட்டின் மூலம் கொல்லிமலை சென்றோம். அவர்களின் திசை நோக்கு ஒரு பக்கமிருக்க...

என் திசை நோக்கு வேறாக இருந்தது. அதன் போது நான் கேட்டறிந்த சில சித்தர்கள் மற்றும்...., குருதேவ சித்தர் போன்றவர்களின் செவி வழி செய்தியும் அறிய வந்தேன். சிங்கை வந்தபின் அவர்களை பற்றிய மேல் விபரம் அறிய ஆய்ந்தபோது, அறிந்தது..., தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கொல்லிமலையில் வாழ்ந்த குருதேவ சித்தர் .



சித்தர்களுக்கே உரிய காவியுடையை கோவணமாகக் கட்டியிருப்பார். சடைமுடி,நெற்றியில் நிறைய

விபூதிக் கீற்று, கழுத்தில் ருத்திராக்க மாலையென இருப்பார்.அவரை நெருங்கும் பக்தர்கள் அவரது

பார்வையின் தீட்சண்யத்தை எதிர்கொள்ளும் சக்தியில்லாமல் சடென்று கண் கலங்கி அவர் பாதத்தில்

விழுவார்கள்.

பில்லி,சூன்யம்,பேய் பிடித்தல் போன்ற எந்த பிரச்சனை இருந்தாலும் அவர் குடிலை நெருங்கிய

நொடியில் பறந்துவிடும். அவரை தேடிவரும் நோயாளிகள் சித்தருக்கு காணிக்கையாக

பழவகைகளை மட்டுமே வாங்கி வருவார்கள். அப்படி வாங்கி வருகிற பழங்களை சிலவற்றை

சித்தர் கையிலெடுத்து விட்டாலே அந்த நோயாளியக் குணமாக்கி விடுவார் என்று அர்த்தம்.

சித்தருக்கு தனது குடிலை நெருங்கும் போது ஒவ்வொரு நோயாளியின் நோயின் தன்மையும்

அவருக்குபுரிந்து விடும். இறைவன் மீது தீவிர பக்தி கொண்ட சித்தர், தான் வணங்கும் ஈசனின்

இறையருளால் அமானுஷ்ய சிகிச்சையிலும், மூலிகை மகத்துவத்திலும் குணமாகிவிடுவார்கள்.

ஒருநாள் அதிகாலை…,

அவரது குடிசைத் தேடி சம்பூரணம் என்கிற பத்து வயது பெண்ணும், அவள் தாயும் வந்தனர்.

குடிலுக்குள் கால் வைத்த நொடியில், உடல் ஒரு வெட்டு வெட்டியவாறே கீழே சரிந்தாள்

சம்பூரணம்.சரிந்ததைக் கண்டு அதிர்ச்சியாகி, முகத்தில் தண்ணீர் தெளிப்பதற்காக வெளியே

ஓடினாள் தாய். உடனே சித்தர் தன் சீடனிடம் “அந்தப் பெண்ணின் முகத்தில் துளசித் தீர்த்தம்

தெளித்து அழைத்து வா” என்றார்.

சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்த சம்பூரணம், சித்தரின் முன்பாக நிறக, கண்களில்

ஆக்ரோஷமான சிகப்புடன் அந்த பெண்ணின் கண்களைப் பார்த்தார்.சட்டென சிறுமியின்

முகத்தில் ஏதோ மாற்றம் ஏற்பட, “ ஏன் ஐயா… நான் தான் இப்போது தெளிவாகிட்டேனே…?

இன்னும் ஏன் முறைத்து பார்க்கிறீர்கள்?” என்றாள் பயத்துடன்.

” தெரியும், நீ தெளிவாயிட்டேன்னு தெரியும். அடுத்து உனக்குள்ள எந்தப் பிரச்சனையும்

புகுந்திட கூடாதுன்னு உன் நெற்றிப் பொட்டுல சக்கர வியூகத்தைப் பதிக்கிறேன். என்றவர்,

அவள் நெற்றிப் பொட்டில் ஆள்காட்டி விரலை வைத்து வலது பக்க சக்கர சுழற்சியாய்

அழுத்த.. உடலுக்குள் மின்சாரம் பார்ந்த உணர்வாய் அந்தப் பெண் கீழே சரிந்தாள்.

’’ இந்தப் பெண்ணைக் கொண்டு போய் குடிலுக்கு வெளியே இருக்கிற வெள்ளைப் பாறையில்

படுக்க வையுங்கள் ” என்று சொல்ல சீடர்கள் அந்தப் பெண்ணைத் தூக்கிக் கொண்டு வெளியே போயினர். நடந்த நிகழ்வுகளை ஆச்சரியமும், அதிர்ச்சியுமாய்ப் பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பெண்ணின் தாய்… “ஐயா, என் புள்ளைக்கு குணமாகிடுங்களா/ நீங்கதான் ஐயா என் புள்ளையைக் காப்பாத்தணும்” என்றபடியே கண்ணீரோடு கரம் கூப்பினாள்.

அதை மறுப்பாகத் தடுத்த சித்தர், “ என்னை ஏன் வணங்குகிறீர்கள். எல்லாம் ஈசன் செயல்.
அவன் சொல்படி நான் செய்கிறேன். அவ்வளவுதான்”, உங்கள் மகளுக்கு ஏற்பட்ட மாற்றம

எப்படி நிகழ்ந்தது, உங்களுக்குத் தெரியுமா”?

“தெரியாதுங்க ஐயா, போனம் மாதம் நானும், என் வீட்டுக்காரரும்,மகளும் சேர்ந்து பக்கத்து

ஊரிலேகூத்து பார்க்கப்போயிருந்தோம். கூத்து முடிந்து வீட்டு வந்து படுத்துட்டோம். ராத்திரி

இரண்டு மணி வாக்கிலே இவ மட்டும் தனியா எழுந்து வெளியே நடந்து போனாள்.

காட்டுக்குள் நுழைஞ்சி ஒத்தை ஆளா அவ போறததைப் பார்த்துவிட்டு பறவை காவல்காரர்

அவளை பின் தொடர்ந்து போயிருக்கார்.


இவ சுடுகாட்டுக்கு முன்னாடி போய் முறைக்க முறைக்க வானத்தியே பார்த்து சிரிச்சுக்கிட்டு
இருந்தாளாம். பறவை காவல்காரர், அவளை பிடிச்சி உலுக்கி “இங்க என்ன பண்ணிக்கிட்டு

இருக்கே? ன்னு கேட்டதற்கு “ என் ஃப்ரெண்டு ராணி கூட்டிக்கிட்டு வந்தாள்” னு சொன்னாளாம். அவளைக் கூட்டிக்கிட்டு வந்ததா சொன்ன ராணி, இரண்டு மாசத்துக்கு முன்னாடிதான் செத்துப் போயிட்டா. உடனே காவல்காரர் இது ஆவியோட சேஷ்டைன்னு புரிஞ்சிகிட்டு,அவர் போர்த்திருந்த கறுப்பு போர்வையை இவளுக்குப் போர்த்தி இரும்பு தடியை கையில் கொடுத்து கூட்டிக்கிட்டு வந்தார்.

Comments

  1. சுடுகாட்டுக்கு முன்னாடி போய் முறைக்க முறைக்க வானத்தியே பார்த்து சிரிச்சுக்கிட்டு
    இருந்தாளாம்.
    very afraid.

    ReplyDelete

Post a Comment