பிரதோஷம் #2

திருக்குறள் அனைத்து சமயங்களுக்கும் உரிய பொது மறையாகும். இதில் நேரடியாக இல்லாமல் மறைமுகமாகச் சில புராண வரலாறுகள் சுட்டப்படுகின்றன. அவற்றிலென்று சிவபெருமான் நஞ்சு உண்ட வரலாறாகும். தேவர்கள் தாங்கள் உயிர் வாழ்வதற்காக அவருக்கு நஞ்சினை அளித்து அருந்தும்படி வேண்டினர். இறைவன் அதனை மறுத்திருக்கலாம் என்றாலும் நயத்தக்க நாகரீகமும் பண்பாடும் காக்க வேண்டி அதனை உண்டு அவர்களைக் காத்து அருள் புரிந்தார். இந்த வரலாறு மறைமுகமாகத் திருக்குறளில்..,

பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர்
நயத்தக்க நாகரீகம் வேண்டுபவர்.
- என்று குறிக்கப்பட்டுள்ளது.

நமது சமயம் விஞ்ஞானத்தின் அடிப்படை தத்துவம் கொண்டது.சரி, விஞ்ஞானம் என்ன கூறுகிறது.பிரபஞ்ச சக்திகளில் நான்கு வித சக்திகள் இணைந்து இவ்வுலகைத்தையே படைத்துள்ளது. இச்சக்திகளுள் முன்னோடியாக விளங்குவது ஆதி பராசக்திதான். ஆதி பராசக்தியின் மூலமே பிரம்மதேவன்,மகாவிஷணு, மகேஸ்வரன், சக்தி உட்பட நான்கு மகாசக்திகளாயினர். இந்த நால்வரையும் சதுர்வேதங்கள் என்றும் குறிப்பிடலாம். இவர்களே சதுர் வர்ணங்களும் ஆவர். பாரசக்தி, பிரம்மதேவன், மகாவிஷ்ணு, மகேஸ்வரன்
இவர்களின் சக்திகளைக் கொண்டு அறிவியல் நிபுணர்கல் விஞ்ஞான ரீதியில் வாயுக்களாக சுட்டிள்ளனர்.

பராசக்தி - கரியமிலா வாயு [ Carbon Dioxide ]
மகாவிஷ்ணு - பிராண வாயு [ Oxygen ]
பிரம்மதேவன் – நைட்ரஜன் [ Nitrogen ]
மகேஸ்வரன் – ஹைட்ரஜன் [ Hydrogen
Asrto Physics என்ற விஞ்ஞான ஆய்வின் மூலம் இந்த நான்கு சக்திகளை அறிந்துகொள்ளலாம். திரிமூர்த்தி என்று சொல்லப்படும் மூன்று தத்துவங்களும் “எலக்ரோன்” (Electron ), ”நியுட்ரோன்”,(Neutron), “புரோட்டன்” (Proton) - என்ற மூன்று சக்திகளுக்குட்பட்டவையே.எனவேதான் மகாசக்தியும் இம்மூன்று சக்திகளையும் தன்னையே வலம் வரவைத்து விட்ட மையப் புள்ளியாக ஆகிறார். புராண காலத்தில் ஆதிபராசக்தியின் தலைமையின் கீழ் பிரம்மதேவன் சிருஷ்ப்பதிலும், மகாவிஷ்ணு காக்கும் கடவுளாகவும், மகேஸ்வரன் சம்ஹாரம் செய்பவராகவும் பொறுப்பேற்றனர்.

நவீன சாஸ்திரப்படி கண்ணோட்டமிடுகையில் ஓர் அணுவின் நடுநாயமாக ஆதிபராசக்தி திகழ்கின்றாள்.
அவளுக்கு துணையாக :-
“ எலக்ரோன்” (Electron), - பிரம்மதேவனும்,
” நியுட்ரோன்”, (Neutron), - விஷ்ணுவும்,
“ புரோட்டன்” (Proton) - மகேஸ்வரனும்,….,
-- விளங்குகின்றனர்.
இதை கண்ணுறும்போது இந்தச் சக்தியே பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் வெளியான அரும்பெரும்
தத்துவங்களைக் கொண்ட ஒரு பெரிய பொருளாக விளங்குகிறது.

மகாசக்தி என்றாலே இரும்புச் சக்தி என்பது பொருள். “கார்பன்’ தான் உலகில் சக்தி பெற்ற உலோகம். இந்த உலோகமே காந்த சக்தி பெற்ற உலகையே ஈர்க்கிறது. இச்சக்தி சூரியனில் அதிகமாக இருப்பதால் மற்ற கிரங்களையும் அதைச் சுற்றி வரச் செய்கிறது.பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடைந்தபோதுதான் முதன் முதலில் இரும்பு சக்தி வெளியானது.
இரும்பு சக்தி மகாலெட்சுமி. மகாலெட்சுமி கருமை நிறமாகக் காட்சி தந்தாள். அதுவே கார்பனாகிய இரும்பு சக்தி. இதிலிருந்து செம்பு, சொர்ணம், கனகம், வைரம் வெளியானது என்பது இங்கு குறிபிடத்தகக்கதாகும். மகாலெட்சுமி என்ற இரும்புச் சக்தியைக் காப்பாற்றவே விஷ்ணு வந்தார்.

உலகின் ஒப்பற்ற சக்தியான இரும்புச் சக்தியைப் பத்திரப்படுத்த வேண்டும்.
பாற்கடலில் பிறந்த பாவையான மகாலெட்சுமி கருநெய்தல் பூவால் புனைந்த
மாலையை ஏந்தி, உவந்து திருமாலுக்குச் சூட்டி அவனைத் தழுவினாள்
இச்செய்தி செவ்வை சூடுவார் பாகவத்தில் இடம் பெற்றுள்ளது.


இதனை பிரதோஷ காலத்தில் கூறி பெண்கள் வழிபட்டு வந்தால் நல்ல கணவன் கிடைப்பான்
என்றும், இப்பாடலை ஓதும் அனைவருக்கும் திருமகளின் அருள் கிடைக்கும். அப்பாடலை
இனிக் காணலாம்.

’ உளத்திடை இவ்வாறு உன்னி
உவந்திலன் எனை என்றாலும்
களிப்புறும் யானே சென்று
கலப்பன் என்று “அமலை” யாவும்
அளிப்பவன் அலங்கல் சூட்டி
அருமனை “முதலி” மார்பின்
துளிப்பு யன் மணக்கு மின்னில்
தோய்ந்தனன் துயக்கு அற்றான்.
...................................................................................................
திருப்பாற் கடலைக் கடைந்த நிகழ்ச்சியை நினைவுக் கொள்ளூம் வண்ணம், இன்றும் திபேத்தியர்கள் அந்த நிகழ்வை கொண்டாடி மகிழ்கிறார்கள். திருப்பாற் கடலைக் கடைந்த நாளில் தேவர் பள்ளத்தாக்கில் God of Valley -இல் திபேத்திகள் பெரும் திரளாகக் கூடி அதனை ஒரு விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.வண்ணத் தோரணங்கள் கட்டி, கொடியேற்றும் விழாவும் உண்டு.

திருப்பாற் கடலைக் கடைந்த நாளில் கடலைக் கடைவதாக பாவனையில் இரு பக்கதிலிருந்தும் கயிற்றை கட்டி இழுக்கிறார்கள். இறுதியாக சுமார் 15 அடி உயரமுள்ள கொடி மரத்தை கயிற்றின் மூலம் தூக்கி நிறுத்துகிறார்கள்.அந்த கொடி மரம் மறுவருடம் வரை இருக்கும். மறு வருடம் விழாக்கொண்டாடி புதிய கொடி மரத்தினை நடுவார்கள்.

இமையாது உயிராது இருந்தாய் போற்றி
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமைபாகம் ஆகத்து அணைத்தாய் போற்றி
ஊழி ஏழான ஒருவா போற்றி....
-- திருநாவுக்கரசர்-

Comments