நோயுற்று அடராமல் நொந்துமனம் வாடாமல்
பாயிற் கிடவாமல் பாவியன் காயத்தை
ஓற்நொடிக்குள் நீக்கியெனை என் போரூரா
நின் சீறடிக்கீழ் வைப்பாய் தெரிந்தே
பாயிற் கிடவாமல் பாவியன் காயத்தை
ஓற்நொடிக்குள் நீக்கியெனை என் போரூரா
நின் சீறடிக்கீழ் வைப்பாய் தெரிந்தே
_
மத் சிதம்பர சுவாமிகள்
ரிஷி மூலம் பார்க்கக் கூடாது என்று சொல்வது உண்டு. அருணகிரிநாதர், ஷீர்டி பாபா முதலான மகான்களின் பெற்றோர் எவர் என்பது இன்று வரை அறியப் படாத ஒன்று! இதேபோல், சிதம்பர சுவாமிகளை ஈன்றெடுத்த பாக்கியத்தைப் பெற்றவர்கள் எவர் என்பது குறித்து எதிலும் குறிப்பிடப்படவில்லை.
மதுரை மீனாட்சியம்மையின் திருக்குழந்தை யாகவே வளர்ந்தவர் சுவாமிகள். சிறு வயதில் இருந்தே கல்வி- வேள்விகளில் சிறந்து விளங்கினார்; இலக்கியத்தின்பால் ஆர்வம் கொண்டு, உரிய ஆசான் மூலம் கற்றறிந்தார்; இறை வழிபாடு மற்றும் யோக காரியங்களிலும் மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார்;
தினமும்
சுவாமிகளின் தமிழ்ப் புலமையை அறிந்து வியந்த ஆன்மிகச் சான்றோர், இவருக்கு 'கவிராயர்' எனும் பட்டம் அளித்தனர். இதனால் சுவாமிகள், 'சிதம்பரக் கவிராயர்' என அழைக்கப்பட்டார்.
கொங்கு தேசத்தில் உள்ள அவினாசியில், ரெட்டியார் சமூகத்து அன்பர் ஒருவர் வசித்தார். பெரும் செல்வந்தரான இவருக்கு குழந்தை இல்லை. திருத்தலங்கள் பலவற்றுக்கும் சென்று, 'எனக்கேன் இந்த நிலை?' என்று பிரார்த்தித்து வந்தார். அவரது பிரார்த்தனை வீண்போகவில்லை. ஆம்... யோகி ஒருவர் அவரது இல்லத்துக்கு வந்து விபூதி வழங்கிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அந்த யோகி...
குமாரதேவர்.
பின்னர், தன் குருநாதரின் விருப்பப்படி, விருத்தாசலத்தில் சிலகாலம் வசித்தார் குமாரதேவர். ஆறுமாதத்துக்கு ஒருமுறை இங்கிருந்து புறப்பட்டு பேரூருக்கு வந்து, குருநாதரை தரிசித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் குமாரதேவர். ஒருமுறை... அப்படி பயணப்படும்போது, வழியில் அவினாசியில் உள்ள ரெட்டியாரின் வீட்டில் ஓய்வு எடுக்க நேரிட்டது. ரெட்டியாரும் குமாரதேவரை அன்புடன் உபசரித்து மகிழ்ந்தார். அப்போது, குழந்தைச் செல்வம் இல்லாத ஏக்கத்தில் ரெட்டியார் தவிப்பதை அறிந்து கொண்டார் குமாரதேவர். தன்
பிறகு, குழந்தை வளரத் துவங்கியதும் கல்வி முதலான கலைகளை குழந்தைக்கு பயிற்றுவிக்க தகுந்த ஆசிரியரைத் தேடினார் ரெட்டியார். தமிழ்ப் புலமை மற்றும் ஆன்மிக ஞானம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் சிதம்பரக் கவிராயர் குறித்து அறிந்த ரெட்டியார், அவரை தமது இல்லத்துக்கு வரவழைத்தார். தாம் பெற்ற ஞானக் குழந்தைக்கு கல்வி போதிக்கும்படி வேண்டினார். இதை ஏற்ற சுவாமிகளும் அங்கேயே தங்கி, குழந்தைக்கு பாடங் களை போதிக்கலானார்.
ஒரு முறை... விருத்தாசலத்தில் இருந்து பேரூருக்கு கிளம்பி வந்த குமாரதேவர், வழக்கம் போல் ரெட்டி யாரின் இல்லத்தில் தங்கினார். அப்போது அங்கு சிதம்பர சுவாமிகளை சந்தித்தார்.
பிறகு குமாரதேவரிடம், ''இவனை உன் புத்திரனாகக் கருதி, தீட்சை கொடுத்து அருள் செய்'' என்றார் சாந்தலிங்கர். இதைத் தொடர்ந்து குமாரதேவர் வீர சைவ முறைப்படி சிதம்பர சுவாமிகளுக்கு 21 தீட்சைகள் செய்வித்து நிஷ்டை, சமாதி முதலானவை கைகூடும் பேற்றையும் கூறி அருளினார். இதையடுத்து குமாரதேவர் சொன்னபடி, தினமும் பல மணி நேரம் தியானத்தில் மூழ்கி எழுந்தார் சிதம்பர
சுவாமிகள். ஒரு நாள் சுவாமிகள் தியானத் தில் மூழ்கியிருந்த போது, தோகைவிரித்தபடி ஆடும் மயில் ஒன்றைக் கண்டார். இதுகுறித்து குருநாதர் குமாரதேவரி டம் கூறி விளக்கம் கேட்டார் சுவாமிகள்.
குருநாதரோ, ''உடனே நீ மதுரைக்குச் சென்று மீனாட்சி அம்மையை தியானித்து வழிபடு. இந்தத் தரிசனத்துக்கான காரணம் என்ன என்பது உனக்குப் புலப்படும்'' என்றார்.
எனவே, அங்கிருந்து மதுரைக்கு வந்தவர், அன்னை மீனாட்சியின் ஆலயத்துக்கு சென்று அவளை மனம் உருகி வழிபட்டார். அன்னையின் சந்நிதிக்கு எதிரே கடும்
யுத்தபுரி என்று அன்னை அருளியது காஞ்சி புரத்துக்கு அருகில் உள்ள திருப்போரூரே என்பதை அறிந்த சிதம்பர சுவாமிகள், ஒரு நன்னாளில்... மதுரையில் இருந்து புறப்பட்டார். வழியில், விருத் தாசலத்தில் உள்ள தன் குருநாதரை தரிசித்தார். அப் போது குமாரதேவர், சமாதி அடையும் தருணத்தில் இருந்தார். அவரை வணங்கி, குருவருள் பெற்று யாத்திரையை தொடர்ந்தார் சிதம்பர சுவாமிகள்.
'இங்கு முருகப் பெருமானின் ஆலயம் எங்கு உள்ளது?' என்று ஊர்மக்களிடம் கேட்டார். ''முருகப்பெருமானுக்கு கோயிலா... இந்த ஊரிலா...? இங்கு வேம்படி விநாயகர்தான் இருக் கிறார். வேப்பமரத்தின் அடியில் உள்ள பிள்ளையாரைத்தான் கும்பிட்டு வருகிறோம்'' என்று கூறி, அந்தக் கோயிலுக்குச் செல்லும் வழியைக் காட்டினர்.
அந்தக் காலத்தில் இந்தப் பகுதி, பனங்காடாக இருந்தது. 'முருகப் பெருமான் ஆலயத்தை எப்படி யேனும் கண்டு பிடித்து விட வேண்டும். அன்னை மீனாட்சி நம் முயற்சிக்கு உதவுவாள்' எனும் நம்பிக்கையுடன், வேம்படி விநாயகர் ஆலயத்தின் அருகே ஓலைக் குடில் ஒன்றை அமைத்து தங்கி னார். அருகில் உள்ள வள்ளையார் ஓடையில் தினமும் நீராடி, வேம்படி விநாயகரை வழிபட்டு ஜபம் செய்து வந்தார். பகல் வேளையில்... பனங் காட்டில் கந்தவேள் ஆலயத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டார்.
'அழகன் முருகன் கிடைத்து விட்டான்; அவன் குடி கொண்டுள்ள கோயிலும் கிடைத்து விடும்' என்று உற்சாகத்துடன் கோயிலைத் தேடும் பணி யில் தீவிரமாக இறங்கினார்.
ஒரு நாள், வள்ளையார் ஓடையில் நீராடி, மூலவரான கந்தவேளுக்கு அபிஷேக- ஆராதனைகளை முடித்த வேளையில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.
சிதம்பர சுவாமிகளின் குருவான குமார தேவரின் (இதற்கு முன்னரே குமாரதேவர் சமாதி ஆகி விட்டார் என்றும் சொல்வர்) வடிவில் கந்தவேள் எழுந்தருளினார். இந்த நிலையில், குருநாதரை எதிர்பார்க்காத சிதம்பர சுவாமிகள் பெரிதும் மகிழ்ந்தார். 'அன்னை மீனாட்சியின் அருளுடன் முருகப் பெருமானின் ஆலயத்தைக் கண்டுபிடிக்கவே இங்கு வந்திருக்கிறேன்' எனும் தகவலைத் தெரிவித்தார். அப்போது,
குருநாதர் வடிவில் இருந்த முருகப் பெருமான், சிதம்பர சுவாமிகளின் நெற்றியில் திருநீறு பூசினார்.
அவ்வளவுதான்! மறுகணம் பிராகாரங் கள், தூண்களுடன் அமைந்த மண்டபங்கள் முதலான கோயில் அமைப்பு முழுவதும் சுவாமிகளுக்கு தெரிந்தது. மன நிறைவுடன் குருநாதரை திரும்பிப் பார்த்தார் சுவாமிகள். அப்போது குருநாதரின் வடிவில் இருந்த கந்தவேள், புன்னகைத்தபடியே நடந்தார்; குடிலில் இருந்த மூர்த்தத்துக்குள் மறைந்தார். திகைத்துப் போன சுவாமிகள், 'கந்தவேளின் திருவிளையாடல் இது' என்பதை உணர்ந்து சிலிர்த்தார்.
இப்படிப்பட்ட பழைமையான ஓர் ஆலயத்தை பக்தர்கள் தரிசிக்கும் பொருட்டு, அதை வெளிக் கொண்டு வரும் பொறுப்பை சுவாமிகளுக்கு அளித்திருந்தாள் அன்னை மீனாட்சி!
அடுத்து ஆலயத் திருப்பணிகளைத் துவக்கினார் சுவாமிகள். ஊர்மக்களின் பிணி நீங்க, அவர்களுக்கு திருநீறு தந்து அருளினார். அனைவரும் நோயில் இருந்து மீண்டனர். குடும்பப் பிரச்னைகளில் சிக்கித் தவித்தோரும் சுவாமிகளிடம் திருநீறு பெற்று, மனம் தெளிந்தனர். அனைவரும் திருப்பணிக்கு தங்களால் இயன்ற தொகையை சுவாமிகளிடம் வழங்கினர்.
செல்வந்தர்கள் பலரும் தங்கத்தையும் பணத்தையும் அள்ளிக் கொடுத்தனர். கிளியனூர் ஞானம்மையாரும் தன்னிடம் இருந்த சிறு தங்கத்தை வழங்கினார்.
பொருள் மிகுந்தோர், சில கிராமங்களையே சுவாமிகளி டம் காணிக்கையாகக் கொடுத்தனராம்!
குடில் நிறைய பொன் - பொருளை சுவாமிகள் வைத்திருக்கும் விவரத்தை அறிந்த கொள்ளைக் கூட்டம், சுவாமிகள் தனியே இருந்தபோது, அவரிடம் இருந்த தங்கத்தையும் பணத்தையும் அபகரிக்க திட்டமிட்டது. அதன்படி ஒரு நாள், 'சுவாமிகளைத் தாக்கிவிட்டு இவை அனைத் தையும் கொள்ளை அடித்துக் கொண்டு போய் விடலாம்' என்கிற எண்ணத்தில், அவரைச் சூழ்ந்தபடி அவரைத் தாக்குவதற்காக கைகளை ஓங்கினர். அப்போது, அவர்கள் அனைவரையும் அமைதியாக பார்த்தபடியே இருந்தார் சுவாமிகள்.
திருப்பணி முடிந்து, ஆலயத்தை புதுப்பித்து, பூஜைகள் நடத்துவது குறித்து விவரித்தார் சுவாமிகள். கந்தவேளை வழிபடுவதற்கு திருப்போரூர் தலத்துக்கு வரும் அன்பர்கள், அவனது பெருமை யையும், பேரரருளையும் சந்நிதியிலேயே பாடிப் பரவசப்பட வேண்டும் என்பதற்காக, திருப்போரூர் சந்நிதிமுறை எனும் 726 பாடல்களைக் கொண்ட பாராயண நூலை இயற்றினார். தவிர, மதுரை மீனாட்சியம்மை கலிவெண்பா, திருக்கழுக்குன்றம் வேதகிரிசுரர் பதிகம், விருத்தாசலம் குமாரதேவர் நெஞ்சுவிடு தூது, விருத்தாசலம் குமாரதேவர் பதிகம், பஞ்சதிகார விளக்கம் ஆகிய நூல்களையும் அருளினார் சிதம்பர சுவாமிகள்!
புராண சிறப்பு வாய்ந்த தலம் திருப்போரூர்! ஈசனின் அருளால்... திருமாலும் லட்சுமியும் கண்ணுவ முனிவரால் தங்களுக்கு நேர்ந்த சாபத்தில் இருந்து விமோசனம் பெற்ற இடம்! அகத்தியருக்கு, முருகப் பெருமான் உபதேசித்தது இங்குதான்! அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம்; சிதம்பர சுவாமிகளால் யந்திர ஸ்தாபனம் செய்து வைக்கப்பட்ட ஆலயம்; அசுரர்களை போர் புரிந்து முருகப் பெருமான் அழித்த தலம்... என திருப்போரூருக்கு சிறப்புகள் பல உண்டு.
சில காலம் கழித்து, திருப்போரூரில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள கண்ணகப்பட்டு எனும் ஊருக்கு இடம் பெயர்ந்தார் சுவாமிகள். அங்கு மடாலயம், பூஜை மடம் மற்றும் ஒடுக்க அறை ஆகியவற்றை அமைத்தார். ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டார். சுவாமிகளின் பெருமைகளை அறிந்தவர் கள், பல ஊர்களில் இருந்தும் கண்ணகப்பட்டுக்கு வந்து அவரை தரிசித்துச் சென்றனர். அவரிடம் சிவ தீட்சை பெற்று, சிலர் சீடரானார்கள். திருப்போரூர் முருகப்பெருமானின் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள், சுவாமிகளை தரிசித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். சுவாமிகள் தினமும் நீராடிய வள்ளையர் ஓடை, சரவணப் பொய்கை எனும் பெயரில் வற்றாத தீர்த்தமாக, முருகப் பெருமான் கோயிலுக்கு முன்னே இன்றும் உள்ளது.
சிதம்பர சுவாமிகளின் மடாலயத் திருக்கோயிலைத் தரிசிப்போமா?
விஸ்தாரமான இடத்தில்... கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகிய அமைப்பில் அழகுறக் காட்சி தருகிறது திருக்கோயில். ஆவுடை யாரின் மேல் சலவைக் கல்லால் ஆன பாணலிங்கம்.
பிராகார வலம் வரும்போது சற்று விலகிச் செல்லும் பாதை ஒன்றில் பயணித்தால் சுவாமிகளின் ஒடுக்க அறையைத் தரிசிக்கலாம். தவம் முதலானவை சுவாமிகளுக்கு ஸித்தியான இடம் இது. இங்கு பஞ்ச லோகத்தால் ஆன சுவாமிகளின் விக்கிரகம் உள்ளது. குருபூஜையின்போது மட்டும் (வைகாசி விசாகம்) விக்கிரகத்தை வெளியே எடுத்து வந்து அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடை பெறுகின்றன. பிற நாட்களில் புனுகு மற்றும் ஜவ்வாது சார்த்தி மாலை அணிவிப்பது வழக்கமாம்.
ஒடுக்க அறையில் நிஷ்டை, யோகம் முதலானவற்றை சுவாமிகள் இப்போதும் அனுஷ்டித்து வருவதாக ஐதீகம். எனவே, அவருக்குத் தொந்தரவு கூடாது என்பதால், இங்கு வழிபாடு இல்லை. ஒரேயரு திருவிளக்கு மட்டும் 24 மணி நேரமும் சுடர் விட்டு பிரகாசித்துக் கொண்டிருக் கிறது. சுவாமிகள் பயன்படுத்திய சுரங்கத்தை மேடை போல் அமைத்து மூடி வைத்துள்ளனர். அவர் அமர்வதற்குப் பயன்படுத்திய புலித்தோல் மற்றும் பாதரட்சை ஆகியவற்றையும் தரிசிக்கலாம்.
சிதம்பர சுவாமிகளின் மேல் இவர்கள் கொண்டிருக்கிற அபரிமிதமான பக்தி வியக்க வைக்கிறது. ஆம்! குருவருளை மிஞ்சிய அருள் ஏது?
தகவல் பலகை
தலம்: திருப்போரூர் - கண்ணகப்பட்டு.சிறப்பு: எங்கே இருக்கிறது?: சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலையில் கேளம்பாக்கத்தை அடுத்து அமைந்துள்ளது கண்ணகப்பட்டு. இங்குதான் சிதம்பர சுவாமிகளின் திருமடாலயம் இருக்கிறது. கண்ணகப் பட்டில் இருந்து திருப்போரூருக்கு சுமார் ஒரு கி.மீ. தொலைவு. எப்படிப் போவது?: அடையாறு, தி.நகர், தாம்பரம் உட்பட சென்னையின் பல பகுதிகளில் இருந்தும், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய ஊர்களில் இருந்தும் திருப்போரூருக்கு நேரடி பேருந்து வசதி உண்டு.
தொடர்புக்கு: அருள்மிகு கந்தசாமி ஆலயம்
திருப்போரூர் ஆதீனம் திருப்போரூர் - 603 110 காஞ்சிபுரம் மாவட்டம். போன்: (044) 2744 6226 |
Comments
Post a Comment